sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி கே.கே.நகரில் சோகம்

/

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி கே.கே.நகரில் சோகம்

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி கே.கே.நகரில் சோகம்

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி கே.கே.நகரில் சோகம்


ADDED : மார் 17, 2025 11:43 PM

Google News

ADDED : மார் 17, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே.நகர், :கே.கே.நகர், ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி, 71. இவர், அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் பூசாரி. இவரது மனைவி சாந்தி, 61.

மூர்த்தி ஆஸ்துமா மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம், தம்பதி உணவு அருந்தி விட்டு துாங்கியுள்ளனர்.

மாலை எழுந்த சாந்தி, தன் கணவனை எழுப்ப முயன்றார். அவர் அசைவின்றி இருந்ததால், தன் மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர்களது மருமகன் கார்த்திக், வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, கட்டிலில் படுத்திருந்த மூர்த்தியின் மார்பில், சாந்தியும் அசைவின்றி படுத்திருந்தார்.

கார்த்திக் இருவரையும் மீட்டு, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us