sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு

/

கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு

கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு

கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு


ADDED : ஏப் 04, 2025 12:28 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,வடசென்னையில் எண்ணுார், மணலி உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இதனால், கோடை காலத்தில் மின் சாதனங்களில், 'ஓவர்லோடு' ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தவிர்க்க, மணலியில் உள்ள, 110/ 33 கிலோ வோல்ட் திறன் உடைய துணைமின் நிலையத்தில், 25 எம்.வி.ஏ., எனப்படும், 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறன் உடைய பவர் டிரான்ஸ்பார்மருக்கு பதில், 50 எம்.வி.ஏ., டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. இதனால், 45 மெகா வாட் மின்சாரம் வரை கையாளப்படும்.

இதேபோல், எண்ணுாரில், 110/ 11 கி.வோ., துணைமின் நிலையத்தில், 10 எம்.வி.ஏ.,க்கு பதில், 15 எம்.வி.ஏ., டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது.

இதனால், 12 மெகா வாட் மின்சாரத்தை கையாள முடியும்.

ஏற்கனவே, மணலி துணைமின் நிலையத்தில், 25 எம்.வி.ஏ., திறனில் இருந்த மற்றொரு டிரான்ஸ்பார்மர், 50 எம்.வி.ஏ., திறனுக்கும்; எண்ணுார் துணைமின் நிலையத்தில், 10 எம்.வி.ஏ., திறனில் இருந்த டிரான்ஸ்பார்மர், 15 எம்.வி.ஏ., திறனுக்கும் தரம் உயர்த்தப்பட்டு விட்டன.

தற்போது, இரு டிரான்ஸ்பார்மர்களின் திறன் உயர்த்தப்பட்டதால், இரு துணைமின் நிலையங்களிலும், கூடுதல் மின்சாரத்தை கையாள முடியும்.

இதனால், எண்ணுார், மணலி, திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், கூடுதல் மின்சாரத்தை, சீராக வினியோகம் செய்ய முடியும்.






      Dinamalar
      Follow us