sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் கஞ்சா கடத்திய திரிபுரா 'குருவி'க்கு கம்பி

/

ரயிலில் கஞ்சா கடத்திய திரிபுரா 'குருவி'க்கு கம்பி

ரயிலில் கஞ்சா கடத்திய திரிபுரா 'குருவி'க்கு கம்பி

ரயிலில் கஞ்சா கடத்திய திரிபுரா 'குருவி'க்கு கம்பி


ADDED : செப் 29, 2025 12:00 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்:திரிபுரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி, 'குருவி' போல செயல்பட்டு, சென்னை வியாபாரிகளுக்கு சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

வடமாநிலத்தில் இருந்து, ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெரம்பூர் ரயில் நிலையத்தின் வெளியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து சோதித்தபோது, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப், 29, என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், திரிபுரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி, குருவி போல் செயல்பட்டு, சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு விற்றது தெரிந்தது. இவரது அடையாளங்களை வைத்து, வியாபாரிகள் கஞ்சாவை வாங்கி சென்னை முழுதும் விற்றுள்ளனர்.

இவரிடம் கஞ்சா வாங்கும் வியாபாரிகள் குறித்து, போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us