/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளரை தாக்கிய இருவர் கைது
/
துாய்மை பணியாளரை தாக்கிய இருவர் கைது
ADDED : ஆக 01, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு கே.பி.பார்க்கை சேர்ந்தவர் மாதவன், 24; துாய்மைப் பணியாளரான இவர், கடந்த 26ம் தேதி மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதி வாலிபர்கள் தகராறு செய்ததோடு, மாதவனை கல்லால் சரமாரியாக தாக்கினர்.
புளியந்தோப்பு போலீசார், பிரவீன் ராஜ் என்பவரை ஏற்கனவே கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த புளியந்தோப்பை சேர்ந்த மணிபிரசாத், 20, ராகுல்,19 ஆகிய இருவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.