sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

/

ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது


ADDED : ஜூலை 08, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, விரைவு ரயிலில் சென்னை சென்ட்ரலுக்கு கடத்தி வந்த, 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின், ஐந்தாவது நடைமேடைக்கு, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து ஒரு விரைவு ரயில் வந்தது.

அதில் வந்த சிவகங்கை மாவட்டம், நேரு பஜாரைச் சேர்ந்த விஷ்ணுவர்தன், 23, சிவகங்கை திருப்புவனத்தைச் சேர்ந்த ஹைம்நாத்பாபு, 22, ஆகியோரை பிடித்தனர். அவர்களின் பைகளை சோதித்தபோது, 13 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு 2.30 லட்சம் ரூபாய்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, ரயிலில் கொண்டு வந்து, பின் மதுரைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us