/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது
/
போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது
ADDED : மார் 10, 2026 05:29 AM

மாதவரம்: மொபைல்போன் திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 36. இவர், மாதவரம், மூலக்கடை மேம்பாலம் அருகே, நேற்று சாலையில் மொபைல்போனில் பேசியபடி நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சரண்ராஜின் கையில் இருந்த மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் சரண்ராஜ் புகார் கொடுத்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்தனர். இதில், ஆந்திர மாநிலம் அக்கிவேடு கிராமத்தைச் சேர்ந்த பாபு, 20, மற்றும் 15 வயது சிறுவன் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

