sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வழக்கறிஞரை தாக்கிய இருவருக்கு 'காப்பு'

/

வழக்கறிஞரை தாக்கிய இருவருக்கு 'காப்பு'

வழக்கறிஞரை தாக்கிய இருவருக்கு 'காப்பு'

வழக்கறிஞரை தாக்கிய இருவருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 20, 2025 12:08 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை,

ராயபுரம், ஆதாம் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ், 32; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். நேற்று முன்தினம் இரவு, வண்ணாரப்பேட்டை, மாடல் லைன் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.

தன் வாகனத்தை, 'டி' பிளாக் அருகே நிறுத்தியிருந்தார். நண்பரை பார்த்து திரும்பி வந்து, வாகனத்தை எடுக்க முயற்சித்தார். அப்போது, அங்கு நின்றிருந்த இருவர், 'இங்கு எதற்காக வாகனத்தை நிறுத்தினாய்' என, சபாஷிடம் வாக்குவாதம் செய்து, கை மற்றும் பிளாஸ்டிக் பக்கெட்டால், அவரை தாக்கியுள்ளனர்.

இதில், அவருக்கு தலை மற்றும் கண்ணில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற வினித்குமார், 26, சந்தோஷ், 24, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், வினித்குமார் மீது, 14 வழக்குகளும், சந்தோஷ் மீது, மூன்று வழக்குகளும் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us