sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காரில் கஞ்சா கடத்திய வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை

/

காரில் கஞ்சா கடத்திய வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை

காரில் கஞ்சா கடத்திய வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை

காரில் கஞ்சா கடத்திய வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : பிப் 02, 2025 12:48 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கீழம்பி சந்திப்பு அருகே,கடந்த 2022 ஜூன் 25ல், காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த, 'டாடா ஸ்பேசியோ' காரை பரிசோதித்தனர்.

அதில், காரின் இன்ஜின் கீழ் பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தனி அறையில், 30 பாக்கெட்டுகளில், 60 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 39, மற்றும் பாண்டீஸ்வரன், 29, ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெர்மிஸ் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

எனவே, இருவருக்கும், தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக, நீதிபதி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us