ADDED : நவ 07, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகர், 10வது தெருவில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று, சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், 32, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீபா, 37, ஆகிய இருவரும், வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் சிக்கிஇருந்த இளம்பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.