ADDED : நவ 04, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: அண்ணாநகர் 2வது அவென்யூவில் துணிக்கடை இயங்கி வருகிறது. அந்த கடையின் முகப்பு நடைபாதையில், சில இளைஞர்கள் இணைந்து, பேக்கரி தின்பண்டங்கள் விற்கும் சிறிய உணவகம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, உணவகத்தில் சாப்பிட்ட சிலர், துணிக்கடையின் வெளியில் இருந்த அலங்கார பொம்மை ஆடையில் கைகளை துடைத்ததாக தெரிகிறது.
இதை தட்டிக்கேட்ட துணிக்கடை ஊழியர்களுக்கும், உணவகம் நடத்தி வந்த இளைஞர்கள் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இருதரப்பினரிடம் திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

