ADDED : மே 02, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தேனாம்பேட்டை, சீத்தாம்மாள் சாலையை சேர்ந்தவர் ரகுநந்தன், 60. கடந்த, 28 ம் தேதி மதியம், தேனாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
சிறிது நேரம் உறவினர் வீட்டில் இருந்து விட்டு வெளியே வந்தபோது, அவரது வாகனத்தை காணவில்லை.
ரகுநந்தன் அளித்த புகாரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், கோபாலபுரம், எல்லாரி தெருவைச் சேர்ந்த ஆனந்த், 23, இரு சக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது, 17 திருட்டு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.