/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சகோதரியின் மகளை தாக்கிய மாமன் கைது
/
சகோதரியின் மகளை தாக்கிய மாமன் கைது
ADDED : மார் 05, 2026 05:12 AM
தாம்பரம்: தாம்பரத்தில், சகோதரியின் மகளை தாக்கிய, போதைக்கு அடிமையான தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு தாம்பரம், தங்கவேல் தெருவை சேர்ந்தவர் தங்கமணி, 42. போதைக்கு அடிமையான இவரை விட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால், தங்கமணியின் 5 வயது மகனை, அவரது சகோதரி வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், மார்ச் 1ம் தேதி, அந்த குழந்தைக்கு சகோதரியின் 18 வயது மகள், சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு போதையில் சென்ற தங்கமணி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின், செங்கல் மற்றும் இரும்பு கம்பியால் சகோதரியின் மகளை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அப்பெண், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, தங்கமணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

