sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விடுபட்ட வார்டில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் பணிகள் தீவிரம் விடுபட்ட 15 வார்டில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் மறைமலைநகரில் பணி தீவிரம்

/

விடுபட்ட வார்டில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் பணிகள் தீவிரம் விடுபட்ட 15 வார்டில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் மறைமலைநகரில் பணி தீவிரம்

விடுபட்ட வார்டில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் பணிகள் தீவிரம் விடுபட்ட 15 வார்டில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் மறைமலைநகரில் பணி தீவிரம்

விடுபட்ட வார்டில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் பணிகள் தீவிரம் விடுபட்ட 15 வார்டில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் மறைமலைநகரில் பணி தீவிரம்


ADDED : மார் 05, 2024 12:29 AM

Google News

ADDED : மார் 05, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,மறைமலைநகர் சிறப்பு நிலை நகராட்சியின் 21 வார்டுகளில் 2,142 சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் 325.708 கி.மீ., இதில், ஆறு வார்டுகளில், 2007- - 08ம் ஆண்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடை அபிவிருத்தி திட்டத்தில், 37.50 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில், 68 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதற்காக, அடிகளார் சாலையில், 2.20 எம்.எல்.டி., கொள்ளளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 15 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இதனால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது, மழைநீர் வடிகால் மற்றும் காலிமனைகளில் விடப்பட்டது. எனவே, மீதமுள்ள பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வலுத்தது.

செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, இது குறித்து சட்டசபையில் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 15 வார்டுகளுக்கு, புதிதாக பாதாள சாக்கடை திட்டத்தை விரிவாக்கம் செய்ய, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பின், மத்திய - மாநில மற்றும் நகராட்சி பங்களிப்புடன், 300.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்தாண்டு ஜூலை 7ம் தேதி முதன்மை ஒப்புதல் அரசிடம் பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, விடுபட்ட 15 வார்டுகளில், 218.65 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, கடந்த பிப்., 14ம் தேதி டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கி நடக்கின்றன.

இதற்காக, இரண்டு இடங்களில் 4.49 எம்.எல்.டி., மற்றும் 11.43 எம்.எல்.டி., கொள்ளளவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, 37.39 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டது.

இப்பணிக்கு, வரும் ஏப்., 17ம் தேதி, டெண்டர் விடப்பட உள்ளதாக, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

நகராட்சியில், 15 வார்டுகளில், புதிதாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, 'டெண்டர்' விடப்பட்டு, முதற்கட்ட பணிகள் நடக்கின்றன. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 'டெண்டர்' விடும் பணிகளும் நடக்கின்றன.

- டி.சவுந்தர்ராஜன்,

கமிஷனர்,

மறைமலைநகர் நகராட்சி.






      Dinamalar
      Follow us