sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊதிய குறைப்பு பரிந்துரை 'வாபஸ்' பெற்றது பல்கலை

/

ஊதிய குறைப்பு பரிந்துரை 'வாபஸ்' பெற்றது பல்கலை

ஊதிய குறைப்பு பரிந்துரை 'வாபஸ்' பெற்றது பல்கலை

ஊதிய குறைப்பு பரிந்துரை 'வாபஸ்' பெற்றது பல்கலை


ADDED : ஆக 22, 2025 12:20 AM

Google News

ADDED : ஆக 22, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய குறைப்பு பரிந்துரையை, சிண்டிகேட் குழு வாபஸ் பெற்றுள்ளது.

சென்னை பல்கலை சில ஆண்டுகளாக, நிதி நெருக்கடியில் சிக்கிவருகிறது. இதனால், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதியத்தை, 10,000 முதல் 30,000 ரூபாய் வரை குறைக்க முடிவு செய்தது. இதற்கு, சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி, ஒப்புதல் பெற திட்டமிட்டது.

ஆனால், பேராசிரியர்கள், அலுவலர்கள் அடங்கிய கூட்டுநடவடிக்கை குழு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தியது. இதனால், சிண்டிகேட் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 18 ம் தேதி நடந்த கூட்டத்தில், ஊதிய குறைப்பு தொடர்பான பரிந்துரையை, சிண்டிகேட் குழு வாபஸ் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக, பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், 'தொடர் போராட்டம் காரணமாக, ஊதிய குறைப்பு பரிந்துரையை, சிண்டிகேட் குழு வாபஸ் பெற்றுள்ளது. புதிய நியமனங்களுக்கு, புதிய ஊதிய நடைமுறையை அமல்படுத்த ஆலோசனை நடந்து வருகிறது' என்றனர்.

***






      Dinamalar
      Follow us