sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இலங்கை பெண் கொலை வழக்கு வாலிபரை தேடி உ.பி., விரைந்த போலீசார்

/

இலங்கை பெண் கொலை வழக்கு வாலிபரை தேடி உ.பி., விரைந்த போலீசார்

இலங்கை பெண் கொலை வழக்கு வாலிபரை தேடி உ.பி., விரைந்த போலீசார்

இலங்கை பெண் கொலை வழக்கு வாலிபரை தேடி உ.பி., விரைந்த போலீசார்

1


ADDED : ஜூலை 24, 2025 12:30 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார், இலங்கை பெண் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை தேடி, போலீசார் உத்தர பிரதேசம் சென்றுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 47; கன்டெய்னர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி சரஸ்வதி, 38.

கணவருடன் ஏற்பட்ட தகராறில், அவரை பிரிந்த சரஸ்வதி, ஒன்றரை மாதங்களுக்கு முன் இரண்டு மகன்களுடன் கொளத்துார், தனம்மாள் நகர் முதல் தெருவில், வீடு வாடகைக்கு எடுத்து, தையல் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான சரஸ்வதி, சில தினங்களுக்கு முன் மகன்களை கும்மிடிப்பூண்டியில் விட்டு கொளத்துார் வந்துள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களில், வீட்டில் அழுகிய நிலையில் சரஸ்வதி இறந்து கிடந்தார். கொளத்துார் போலீசாரின் விசாரணையில், மது போதைக்கு அடிமையான சரஸ்வதி, சில மாதங்களுக்கு முன் விபசார வழக்கு ஒன்றில் கைதாகி, சிறையில் ஆறு நாள் தண்டனை அனுபவித்து, ஜாமினில் வெளியே வந்தது தெரியவந்தது.

சரஸ்வதி இறப்பதற்கு முந்தைய நாள் மது போதையில், வாலிபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்ததும், கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது.

காணாமல் போன சரஸ்வதியின் மொபைல்போன் மற்றும் ஸ்கூட்டரை திருடிய வாலிபர், உத்தர பிரதேசம் சென்றது தெரியவந்தது. அவரை தேடி போலீசாரும் உ.பி., பறந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us