sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏரியாக மாறிய காலி நிலத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்

/

ஏரியாக மாறிய காலி நிலத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஏரியாக மாறிய காலி நிலத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஏரியாக மாறிய காலி நிலத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்


ADDED : ஜூன் 11, 2024 05:54 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 05:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: சென்னை புறநகரில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி அமைந்துள்ளது. இங்கு, குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை பாதாள சாக்கடை திட்டம் இல்லை.

இந்நிலையில், குன்றத்துார் - குமணன்சாவடி நெடுஞ்சாலையோரம், மாங்காடு பேருந்து நிலையம் அருகே, காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான 8 ஏக்கர் காலி நிலம் உள்ளது.

இந்த நிலத்தின் அருகே இருந்த மழைநீர் வடிகால்வாய்கள் குடியிருப்புகளாக மாறியதால், தண்ணீர் செல்ல போதிய வழியில்லை.

இதனால், அண்மையில் பெய்த சாதாரண மழைக்கே, தண்ணீர் தேங்கி ஏரி போல் காட்சியளிக்கிறது. மழைநீருடன், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மழைநீர் வெளியேற்ற மாங்காடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us