sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வேளச்சேரி மேம்பால ரயில் சேவை விரைவில் மெட்ரோவுடன் இணைப்பு

/

வேளச்சேரி மேம்பால ரயில் சேவை விரைவில் மெட்ரோவுடன் இணைப்பு

வேளச்சேரி மேம்பால ரயில் சேவை விரைவில் மெட்ரோவுடன் இணைப்பு

வேளச்சேரி மேம்பால ரயில் சேவை விரைவில் மெட்ரோவுடன் இணைப்பு

1


ADDED : பிப் 09, 2025 09:41 PM

Google News

ADDED : பிப் 09, 2025 09:41 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை, தற்போது தினமும் 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வேளச்சேரியையும் பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி, கடந்த 2008ல் துவங்கப்பட்டது.

பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த பணிகள், தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில், பெரிய, பெரிய கட்டடங்களாக வணிக நோக்கத்தோடு அமைக்கப்பட்டன.

ஆனால், மத்திய ரயில்வே துறை நிர்ணயிக்கும் அதிக அளவிலான வாடகை அல்லது குத்தகை கட்டணத்தை அளிக்க, நிறுவனங்கள், வியாபாரிகள் முன்வரவில்லை.

இந்நிலையில், வேளச்சேரி மேம்பால தடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

வேளச்சேரி மேம்பால ரயில் பாதையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவை, ரயில்வே துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

பரங்கிமலை - வேளச்சேரி இணைப்பு பணிகள், அடுத்த இரண்டு மாதங்களில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்.

வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான செலவு, நிதி, ரயில்கள் இயக்கம், நிலம், சொத்து மதிப்பு, வருவாய் பங்கீடு உள்ளிட்டவை குறித்து, வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். இதற்கான ஒப்புதலை, வாரியம் விரைவில் அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

அதன்பின், இந்த தடம் முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இதையடுத்து, மெட்ரோ ரயில் நிறுவனம், 'ஏசி' வசதியுடன் கூடிய ரயில்கள், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us