ADDED : ஆக 26, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம்,சாலையை கடக்க முயன்றபோது, வேன் மோதியதில் படுகாயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சென்னை, ஆதம்பாக்கம், பரங்கிமலை- - வேளச்சேரி உள்வட்டச்சாலையை, 62வயது முதியவர் ஒருவர், கடந்த, 19ம் தேதி கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த வேன், முதியவர் மீது மேதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவரை, அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.
முதியவரின் ஊர், பெயர், விலாசம் தெரியாத நிலையில், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர், தரமணியை சேர்ந்த சுதாகர்,31, என்பவரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
***