ADDED : ஜூலை 02, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'சென்னை - விஜயவாடா பினாகினி விரைவு ரயில், மூன்று நாட்களுக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி, சென்ட்ரல் - ஆந்திரா மாநிலம் விஜயவாடா பினாகினி விரைவு ரயில் இன்று, 10, 27ம் தேதிகளில் மதியம் 2:05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒன்றரை மணிநேரம் தாமதமாக மாலை 3:35 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.