sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வண்டலுார் பூங்காவில் 'சாரல் பாயின்ட்' உஷ்ணம் தணிக்கும் பார்வையாளர்கள்

/

வண்டலுார் பூங்காவில் 'சாரல் பாயின்ட்' உஷ்ணம் தணிக்கும் பார்வையாளர்கள்

வண்டலுார் பூங்காவில் 'சாரல் பாயின்ட்' உஷ்ணம் தணிக்கும் பார்வையாளர்கள்

வண்டலுார் பூங்காவில் 'சாரல் பாயின்ட்' உஷ்ணம் தணிக்கும் பார்வையாளர்கள்


ADDED : ஏப் 20, 2025 12:17 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்கா, 1,490 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்காவான இங்கு, பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள் என, எட்டு வகையிலான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை தத்தெடுக்கும் நடைமுறை பயன்பாட்டில் உள்ளது.

இதுவரை, பல நடிகர்கள், முக்கிய நிறுவனத்தினர் விலங்குகளை தத்தெடுத்துள்ளனர். அந்த வகையில், பூங்காவில் பராமரிக்கப்படும் ஒரு சிங்கம், ஒரு புலியை நடிகர் சிவகார்த்திகேயன், மூன்று மாதத்திற்கு தத்தெடுத்து உள்ளார்.

அதற்கான உணவு மற்றும் பராமரிப்பு தொகையை, பூங்கா நிர்வாகத்திடம் அவர் செலுத்தியுள்ளதாக, பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, வெயில் சுட்டெரித்து வருகிறது. இருப்பினும், பூங்காவிற்கு ஆர்வத்துடன் வரும் பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால், பூங்கா நிர்வாகம் சார்பில், ஏழு இடங்களில் 'சாரல் பாயின்ட்' அமைக்கப்பட்டுள்ளது.

வெயிலில் நடந்து செல்வோர், இந்த சாரல் பாயின்ட்'டில் நின்று, சிறிது நேரம் இளைப்பாறுவதோடு, சாரலில் நனைந்து வெயிலின் உக்கிரத்தை தணித்துக்கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us