sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நியூ ஆவடி சாலை பணியை கிடப்பில் போட்டதால் குடிநீர் வாரிய இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு

/

நியூ ஆவடி சாலை பணியை கிடப்பில் போட்டதால் குடிநீர் வாரிய இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு

நியூ ஆவடி சாலை பணியை கிடப்பில் போட்டதால் குடிநீர் வாரிய இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு

நியூ ஆவடி சாலை பணியை கிடப்பில் போட்டதால் குடிநீர் வாரிய இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு


ADDED : ஜூலை 22, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர் :நியூ ஆவடி சாலையில் விரிவாக்க பணிகள் இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டதால், அங்குள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமாக இடத்தில், ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

அண்ணா நகர் மண்டலம், நியூ ஆவடி சாலையில் வாகன பழுது பார்க்கும் கடைகள், செடிகள், விற்பனை கடைகள் உள்ளிட்டவை ஆக்கிரமித்து உள்ளன.

இந்த கடைகளின் பழுது ஆட்டோக்கள் மற்றும் ஏராளமான கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டதால், சாலை சுருங்கியதுடன், காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க துவங்கியது.

இது தொடர்பாக, நம் நாளிதழில் தொடர்ந்து சுட்டிக்காட்டிய பின், இரு ஆண்டுகளுக்கு முன் கண்துடைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலை துறையின் நிதியில், நியூ ஆவடி சாலையை விரிவுப்படுத்த திட்டமிட்டது.

இதற்காக 2023ல் இரு கட்டங்களாக, இருபுறங்களிலும் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிரடியாக அகற்றியது. பின், முறையாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால், சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

அதிலும், ஐ.சி.எப்., - கீழ்ப்பாக்கம் நோக்கி செல்லும் பாதையில் சாலையோரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடம், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.

காலி மனையாக இருப்பதால், மாடுகளை வளர்ப்பது, வாகனங்களை 'பார்க்கிங்' செய்வது, கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல், அயனாவரம் சக்கரவர்த்தி நகரின் அருகில், குடிநீர் வாரியத்தின் இடமும் குப்பை கொட்டும் இடமாக மாற்றி சீர்கேடு நிலவுகிறது.

வடிகால் வசதி இல்லை நியூ ஆவடி சாலையில் பல ஆண்டுகளாகவே மழைநீர் வடிகால்வாய் வசதிகள் ஏற்படுத்தபடவில்லை. இதனால், சாலையைவிட தாழ்வாக உள்ள இருபுறங்களிலும், ஆண்டுதோறும் மழைநீர் சூழ்ந்து, மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

குறிப்பாக, அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம், வேலாங்காடு சுடுகாடு, அன்னை சத்யா நகர் மற்றும் அயனாவரம், அதை ஒட்டி உள்ள குடியிருப்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

நியூ ஆவடி சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டு இரண்டு ஆண்கள் ஆகியும், நிலமும் கையகப்படுத்தும் பணி கூட முடியவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, நியூ ஆவடி சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை விரைவாக துவங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us