sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தனி நபர்களிடம் ஏமாறாதீர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை

/

தனி நபர்களிடம் ஏமாறாதீர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை

தனி நபர்களிடம் ஏமாறாதீர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை

தனி நபர்களிடம் ஏமாறாதீர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை


ADDED : அக் 19, 2024 12:15 AM

Google News

ADDED : அக் 19, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, குடிநீர் வாரியத்தால், அங்கீகரிக்கப்படாத சில நபர்கள், தொலைபேசி வாயிலாக நுகர்வோரை அணுகுவதாக புகார்கள் வருகின்றன.

குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணத்தை தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு, 'கூகுள் பே, பேடிஎம்' போன்ற, யு.பி.ஐ., செயலிகள் வாயிலாக செலுத்த வற்புறுத்துவதாகவும், தவறினால் குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனக்கூறியும் பணம் பறிக்கின்றனர். இந்த மோசடியை நுகர்வோர் நம்ப வேண்டாம்.

வரி, கட்டணம் செலுத்தும்போது, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குடிநீர் வாரிய இணையதளமான, www.cmwssb.tn.gov.in அல்லது https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற இணைப்பு வாயிலாக செலுத்தலாம்.

'கூகுள்பே, போன்பே, பேடிஎம்' போன்ற செயலியில், CMWSSBஐ தேர்ந்தெடுத்து, பில் எண், மொபைல் எண்ணை உள்ளீடு செய்து செலுத்த வேண்டும்.

வரி வசூல் மையங்களில், காசோலை, வரைவோலை, டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாக செலுத்தலாம். பணிமனை மேலாளர்கள் வைத்துள்ள, ஐ.பி.ஓ.எஸ்., இயந்திரம் வாயிலாகவும் செலுத்தலாம்.

பொதுமக்களுக்கு, நிலுவை தொகை செலுத்துவதில் சந்தேகம் ஏற்பட்டால், 044 - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us