sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

16 தெருக்களில் குடிநீர் குழாய் அருந்ததி நகரில் பணி 'ஜரூர்'

/

16 தெருக்களில் குடிநீர் குழாய் அருந்ததி நகரில் பணி 'ஜரூர்'

16 தெருக்களில் குடிநீர் குழாய் அருந்ததி நகரில் பணி 'ஜரூர்'

16 தெருக்களில் குடிநீர் குழாய் அருந்ததி நகரில் பணி 'ஜரூர்'


ADDED : மார் 15, 2024 12:28 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், திரு.வி.க., நகர் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில், புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முந்தைய குழாய்கள் சேதமானதில், குடிநீரில் கழிவுநீரும் கலந்தது. இங்கு, 400க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன.

தற்போது சென்னை பெருநகர குடிநீர் வாரியம் சார்பில் புதிய குழாய் பதிக்கும் பணி, 4.502 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில் 16 தெருக்களிலும், இரண்டு பகுதியிலும் சேர்த்து 1,730 மீட்டர் மற்றும் 930 மீட்டருக்கு புதிய குழாய்கள் பொருத்தப்படுகின்றன.

பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் ஏற்கனவே, 2.5 அங்குலத்திற்கு குடிநீர் குழாய்கள் இருந்தன. தற்போது 2 அங்குலத்தில் குழாய் அமைக்கின்றனர். இதனால் தண்ணீர் அழுத்தம் குறையுமா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் குறைய வாய்ப்பில்லை என உறுதியளித்து உள்ளனர்' என்றனர்.






      Dinamalar
      Follow us