/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சுடுகாடு செல்ல ரயில்வே சுரங்கபாதை வேண்டும்' பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை
/
'சுடுகாடு செல்ல ரயில்வே சுரங்கபாதை வேண்டும்' பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை
'சுடுகாடு செல்ல ரயில்வே சுரங்கபாதை வேண்டும்' பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை
'சுடுகாடு செல்ல ரயில்வே சுரங்கபாதை வேண்டும்' பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை
ADDED : மார் 04, 2024 01:06 AM
திருவொற்றியூர்:சுடுகாடு மற்றும் மருத்துவமனை செல்வதற்கு, ரயில்வே சுரங்கபாதை வேண்டும், என, எர்ணாவூர் மக்கள் பகுதி சபை கூட்டத்தில், கோரிக்கை விடுத்தனர்.
திருவொற்றியூர் மண்டலம், 4 வது வார்டு, 2,3 பகுதி சபை கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி உதவி பொறியாளர் அன்னலட்சுமி, மலேரியா துறை அலுவலர் மணிமாறன், குடிநீர் மற்றும் வடிகால் துறை அதிகாரி மதன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், எர்ணாவூர் - பஜனை கோவில்தெரு, மேட்டு தெரு, வள்ளூவர் நகர், மாகாளியம்மன் கோவில் தெரு, எர்ணீஸ்வரர் நகர் மக்கள் பங்கேற்று, தங்கள் பகுதிகளின் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
அப்போது, ஆல்இந்தியா ரேடியோ நகர் சுடுகாடு, சுனாமி குடியிருப்பு ஆரம்ப சுகாதார மையம் செல்வதற்கு, மூன்று ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டியுள்ளது.
இதனால், பாதாசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தடுப்பூசி போட போகும், கர்ப்பிணிகள், குழந் தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இறுதி ஊர்வலங்களை கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளது. எனவே, ரயில்வே சுரங்கபாதை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
மாகாளியம்மன் கோவில் தெருவில் இயங்கும், ஆரம்ப சுகாதார மையத்தில், மருத்துவர் பணியமர்த்தப்பட வேண்டும். அவசிய மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.
திருவீதியம்மன் நகரில், நகர்புற நலவாழ்வு மைய கட்டடம் திறக்கப்பட்டது. அதனை செயல்பாட்டிற்கு கொ ண்டு வர வேண்டும். எண்ணுார் அனல் மின் நிலைய சுற்றுச்சுவர் கட்டப்படாததால், மழைநீரால் பாதிப்பு உள்ளது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

