/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆணவ படுகொலை தனிச்சட்டம் இயற்ற துணிவு வேண்டும்: திருமா
/
ஆணவ படுகொலை தனிச்சட்டம் இயற்ற துணிவு வேண்டும்: திருமா
ஆணவ படுகொலை தனிச்சட்டம் இயற்ற துணிவு வேண்டும்: திருமா
ஆணவ படுகொலை தனிச்சட்டம் இயற்ற துணிவு வேண்டும்: திருமா
ADDED : ஆக 10, 2025 12:23 AM
சென்னை, ''மத்திய அரசு தான் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வேடிக்கை பார்க்காமல், மாநில அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, துணிந்து, ஆணவ படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, சைதாப்பேட்டையில், வி.சி., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, திருமாவளவன் பேசியதாவது:
உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நெல்லை கவினின் படுகொலை விசாரிக்க வேண்டும். ஆணவ படுகொலையை விசாரிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசு தான் இயற்ற வேண்டும் என, வேடிக்கை பார்க்காமல், தமிழக அரசு, மாநில அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சிறப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.
மிகவும் பிற்போக்குத்தனம் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திலேயே, ஜாதி ஆணவக் கொலையை தடுக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றால், முற்போக்கு அரசியலை பேசும் தமிழ் மண்ணிலும் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் தேவை.
தி.மு.க., துணிந்து இச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது தான் வி.சி.,யின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் ஜாதிக்கென்று தனி மானம் உள்ளது என்ற உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த உளவியல், ஜாதிய கலப்பு நடந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறது.
இவை தான், சனாதனத்தின் உச்சம். பெண்களை ஒடுக்குவது, பெண் தான் இனப்பெருக்கத்தின் மூலாதாரம், பெண்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டால், ஜாதி காப்பாற்றப்படும் என்பது சனாதனத்தின் கோட்பாடாக உள்ளது. ஆண்ட ஜாதி, வேல் கம்பு துாக்குகிற ஜாதி, வீரப்பரம்பரை எல்லாம், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வால் பரப்பப்படும் அரசியல்.
புராண கதைகளை சொல்லி மக்களை தன்வயப்படுத்துகிற அரசியலை பா.ஜ., முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.