/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் - லாரி மோதி விபத்து கணவர் கண்முன் மனைவி பலி
/
பைக் - லாரி மோதி விபத்து கணவர் கண்முன் மனைவி பலி
ADDED : ஜன 02, 2025 12:35 AM

வில்லிவாக்கம், கொளத்துாரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 56; ரயில்வே ஊழியர். இவரது மனைவி சுசித்திரா, 54. புத்தாண்டை முன்னிட்டு, இருவரும் நேற்று பகல் 12:00 மணியளவில், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், முகப்பேரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
பாடி மேம்பாலத்தில் ஏறிய போது, அவ்வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியதாக தெரிகிறது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சுசித்திரா மீது, லாரி ஏறி இறங்கியது. இதில், கணவர் கண்முன், சம்பவ இடத்திலேயே சுசித்திரா உயிரிழந்தார்.
அங்கிருந்தோர், லாரியை மடக்கி பிடித்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரித்த போலீசார், கர்நாடகா, ஒசப்பேட்டையில் இருந்து ஸ்டீல் ஏற்றி வந்த லாரி ஓட்டுனரான மணப்பா, 40; கிளீனர் ராஜ், 21, இருவரையும் கைது செய்தனர். போலீசாரின் அலட்சியத்தால், 'பீக் ஹவர்' நேரத்தில், அனுமதியின்றி சாலையில் லாரி வந்ததாக அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

