sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்லுாரி பேருந்து மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்

/

கல்லுாரி பேருந்து மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்

கல்லுாரி பேருந்து மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்

கல்லுாரி பேருந்து மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்


ADDED : மே 01, 2025 11:48 PM

Google News

ADDED : மே 01, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர், 40. இவரது மனைவி அகல்யா, 36. இவர்கள், வேளச்சேரி, அண்ணா நகரில் வசித்து வந்தனர். சுரேந்தர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் மாலை இருவரும், புது புல்லட் பைக்கில் பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரில் உள்ள பைக் ஷோரூமிற்கு சென்று கொண்டிருந்தனர்.

ஷோரூம் அருகே சென்றபோது, வேகமாக வந்த தனியார் கல்லுாரி பேருந்து சுரேந்தரின் புல்லட் பைக்கின் பின்னால் மோதியது. இதில், சுரேந்தர் - அகல்யா தம்பதியினர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகல்யா உயிரிழந்தார்.

சுரேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us