sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.74 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் இரு மேம்பால பணி மந்தம் மழைக்காலத்திற்கு முன் பயன்பாட்டிற்கு வருமா?

/

ரூ.74 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் இரு மேம்பால பணி மந்தம் மழைக்காலத்திற்கு முன் பயன்பாட்டிற்கு வருமா?

ரூ.74 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் இரு மேம்பால பணி மந்தம் மழைக்காலத்திற்கு முன் பயன்பாட்டிற்கு வருமா?

ரூ.74 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் இரு மேம்பால பணி மந்தம் மழைக்காலத்திற்கு முன் பயன்பாட்டிற்கு வருமா?


ADDED : மார் 30, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 30, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், மதுரவாயல் வழியாக செல்லும் கூவம் ஆற்றின் குறுக்கே, திருவேற்காடு, அடையாளம்பட்டு, மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தரைப்பாலங்கள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு மழைக்காலத்திலும், கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, தரைப்பாலங்கள் மூழ்கி, அப்பகுதிவாசிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

சென்னையில், கடந்த 2022, நவம்பர் -- டிசம்பர் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலங்கள் மூழ்கின.

அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இதையடுத்து, மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே, உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்ட நிதியின் கீழ், இரண்டு இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டது.

அதன்படி, நொளம்பூர் யூனியன் சாலை - சன்னிதி முதல் குறுக்கு தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 31.65 கோடி ரூபாய் மதிப்பிலும்; சின்ன நொளம்பூர் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 42.71 கோடி ரூபாய் மதிப்பிலும், இரு மேம்பாலங்கள் கட்ட, கடந்த 2023, ஜூலை மாதம் பூஜை போடப்பட்டது.

இந்த பூஜையில் பங்கேற்ற அமைச்சர் நேரு, ஆறு மாதங்களில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என, தெரிவித்திருந்தார்.

இதில், சின்ன நொளம்பூரை இணைக்கும் மேம்பால பணிகள் நடக்கும் இடம் வழியாக, 230 கிலோ வாட்ஸ் மின் வடம் செல்கிறது.

இந்த மின் வடத்தை மாற்றி அமைக்க, மின் வாரியத்திற்கு 2.5 கோடி ரூபாய் கட்டப்பட்டது. இருந்தும், மின் வடங்கள் மாற்றி அமைக்க தாமதமானதால், கட்டுமானப் பணியை துவக்குவதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, அப்பணிகள் முடிந்து, மேம்பால பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன.

அதேபோல், நொளம்பூர் யூனியன் சாலை மற்றும் சன்னிதி முதல் குறுக்கு தெரு வழியாக அமைய உள்ள மேம்பால பணிகள், நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாமதமானது.

தற்போது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

இரு மேம்பால பணிகளும், 50 சதவீதம் முடிந்துள்ளதாகவும், அடுத்த மழைக்காலத்திற்கு முன், இரு மேம்பாலங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us