sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3 கிலோ தாய்லாந்து கஞ்சாவுடன் ஏர்போர்ட்டில் பெண் கைது

/

3 கிலோ தாய்லாந்து கஞ்சாவுடன் ஏர்போர்ட்டில் பெண் கைது

3 கிலோ தாய்லாந்து கஞ்சாவுடன் ஏர்போர்ட்டில் பெண் கைது

3 கிலோ தாய்லாந்து கஞ்சாவுடன் ஏர்போர்ட்டில் பெண் கைது


ADDED : நவ 24, 2024 12:19 AM

Google News

ADDED : நவ 24, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, நேற்று முன்தினம் இரவு இண்டிகோ விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்திருந்த பயணியரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

அதில் வந்த பெண் பயணி ஒருவர் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது பயண விபரத்தை பார்த்த போது, சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றதும், அடிக்கடி பயணம் செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பெண் பயணியை தனியறைக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அவரது உடைமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது, பெண் பயணி எடுத்து வந்த பெட்டியின் உள்ளே தனிஅறை ஒன்று இருந்தது. அதில், சிறிய அளவிலான பார்சல் இருந்தது.

அதை பிரித்து பார்த்த போது, உயர் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் எடை 3 கிலோ. சர்வதேச மதிப்பு 1.5 கோடி ரூபாய்.

கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், சென்னையில் யாருக்கு சப்ளை செய்ய எடுத்து வரப்பட்டது, விமான நிலையத்திற்கு வெளியே வாங்கிக் கொள்ள காத்திருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us