sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வங்கியில் தொழில் கடன் பெற்று மோசடி செய்த பெண் கைது

/

வங்கியில் தொழில் கடன் பெற்று மோசடி செய்த பெண் கைது

வங்கியில் தொழில் கடன் பெற்று மோசடி செய்த பெண் கைது

வங்கியில் தொழில் கடன் பெற்று மோசடி செய்த பெண் கைது


ADDED : ஜூலை 09, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சவுத் இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தொழில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நேற்று வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சவுத் இந்தியன் வங்கி, வளசரவாக்கம் கிளையின் மேலாளராக பணிபுரிபவர் யூஜின் வீனஸ். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் ஒரு புகார் அளித்தார்.

அதன் விபரம்:

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த நகோமி, 39, கமலக்கண்ணன், 41, ஆகிய இருவரும், போலியான ஆவணங்களை தயார் செய்து வங்கியில் சமர்ப்பித்து தொழில் கடன் பெற்றனர். வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். 60.76 லட்சம் ரூபாயை திரும்ப பெற்று தர வேண்டும்.

இதில் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த நகோமி, என்ற பெண்ணையும் கைது செய்தனர். அவரது கணவரும், முக்கிய குற்றவாளியுமான கமலக்கண்ணனை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us