sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகை கடைகளில் கைவரிசை 'கில்லாடி' பெண் சிக்கினார்

/

நகை கடைகளில் கைவரிசை 'கில்லாடி' பெண் சிக்கினார்

நகை கடைகளில் கைவரிசை 'கில்லாடி' பெண் சிக்கினார்

நகை கடைகளில் கைவரிசை 'கில்லாடி' பெண் சிக்கினார்


ADDED : மே 03, 2025 11:56 PM

Google News

ADDED : மே 03, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை,

அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 50. இவர், அதே பகுதியில் 'பத்மா ஸ்ரீ' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு, 24ம் தேதி இரவு, 45 வயதுடைய பெண் ஒருவர், தாலி கயிற்றில் கோர்க்கும், 35,000 ரூபாய் மதிப்பிலான 'ஞானகுழாய்கள்' வாங்கினார்.

ஞானகுழாய்க்கு அரக்கு போட்டு தரும்படி கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, தங்க கம்பல் பார்க்க வேண்டும் எனக் கூறி, வேறு நகைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

சில மணிநேரத்திற்கு பின், ஞானகுழாய் மட்டும் போதும் என வாங்கி சென்றார். கடைக்காரர் இரவு வழக்கம்போல், நகைகளை சோதித்தபோது, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 கிராம் 'ஆண்டிக்' தங்க கம்மல் ஜோடி ஒன்று, மாயமாகி இருப்பது தெரிந்தது.

உடனடியாக, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், ஞானகுழாய் வாங்கிய பெண், ஊழியரின் கவனத்தை திசை திருப்பி திருடியது தெரிந்தது. இது குறித்து, அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், பொழிச்சலுார், நேரு நகரைச் சேர்ந்த தாட்சயினி, 52, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

எப்படி திருடுறாங்க பாருங்க!

இது குறித்து போலீசார் கூறியதாவது:தட்சாயினி மீது, தி.நகர், நசரத்பேட்டை, யானைகவுனி உள்ளிட்ட ஏழு காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. நகை வாங்குவது போல் கடைக்கு சென்று, சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, முன்பே பணத்தை கொடுப்பது இவரது வழக்கம்.குறைந்த விலைக்கு நகைகளை வாங்கி, அதைவிட பல மடங்கு மதிப்பிலான நகைகளை திருடி, அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். ஒவ்வொரு கடையிலும், வெவ்வேறு பெயர் முகவரியை கொடுத்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us