/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.எம்.டபிள்யூ கார் மோதி பெண் பலி
/
பி.எம்.டபிள்யூ கார் மோதி பெண் பலி
ADDED : ஜூன் 04, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ';வண்ணாரப்பேட்டை, நரசிம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வளர், 35. இவர் நேற்றிரவு, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையை நேற்றிரவு கடக்க முயன்றுள்ளார்.
அந்நேரம், சாலையில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார், வளர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வளரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் ஓட்டுனரை பிடித்து விசாரிக்கின்றனர்.