ADDED : டிச 26, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், பெருங்களத்துார் - வண்டலுார் இடையே, நேற்று முன்தினம் தண்டவாளத்தை கடக்க முயன்ற, 45 வயது பெண் ஒருவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தாம்பரம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த பெண் யார், எந்த ஊர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. அப்பெண் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.