/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் கமிஷனரகம் அருகே நடந்த விபத்தில் பெண் பலி வேன் ஓட்டுனர் தலைமறைவு
/
போலீஸ் கமிஷனரகம் அருகே நடந்த விபத்தில் பெண் பலி வேன் ஓட்டுனர் தலைமறைவு
போலீஸ் கமிஷனரகம் அருகே நடந்த விபத்தில் பெண் பலி வேன் ஓட்டுனர் தலைமறைவு
போலீஸ் கமிஷனரகம் அருகே நடந்த விபத்தில் பெண் பலி வேன் ஓட்டுனர் தலைமறைவு
ADDED : ஜூலை 10, 2025 12:28 AM

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார்.
எழும்பூர், வரதராஜபுரம் சேஷகிரி தெருவைச் சேர்ந்தவர் தேவி, 46. இவர், நேற்று காலை மகன் மற்றும் மகளை டவுட்டனில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டு, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த 'டாடா ஏஸ்' சரக்கு வேன், தேவியின் வாகனத்தில் மோதியது. அவர் அணிந்திருந்த 'ஹெல்மெட்' கழன்று விழுந்தது. நிலைதடுமாறி கீழே விழுந்த தேவியின் தலையில், சரக்கு வேன் பின்சக்கரம் ஏறி இறங்கியது.
சம்பவ இடத்திலேயே, தலை நசுங்கி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டார்.
வேப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.