sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண் போலீசிடம் வழிப்பறி வாலிபருக்கு தர்ம அடி

/

பெண் போலீசிடம் வழிப்பறி வாலிபருக்கு தர்ம அடி

பெண் போலீசிடம் வழிப்பறி வாலிபருக்கு தர்ம அடி

பெண் போலீசிடம் வழிப்பறி வாலிபருக்கு தர்ம அடி


ADDED : பிப் 17, 2025 01:19 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவந்தாங்கல்: சென்னை, பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் பரணி, 25, எழும்பூரில் உள்ள நுண்ணறிவு கணினி பிரிவில், காவலராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, பணி முடித்து, மின்சார ரயிலில் பழவந்தாங்கல் ரயில் நிலையம் சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த மர்ம நபர், பரணி அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார். பரணி கூச்சலிடவே, அதே ரயிலில் வந்த மற்ற பயணியர் ஓடிவந்து, செயின் பறித்த நபரை மடக்கி பிடித்தனர்.

பின், தர்ம அடிகொடுத்து, ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாம்பலம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்தியபாலு, 40, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us