ADDED : அக் 14, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி:ஓட்டேரி, பழைய வாழை மாநகரில் குட்கா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி போலீசார், அங்கு குட்கா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சுகுணா, 35, என்பவரை கைது செய்தனர்.
பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 300 கிராம் மாவா மற்றும் 119 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.