sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது

/

வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது

வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது

வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது


ADDED : மே 12, 2024 05:25 PM

Google News

ADDED : மே 12, 2024 05:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய வட மாநிலப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை அசோக் நகர் 10வது தெருவில் குடியிருக்கும் சரிதா என்பவரது வீட்டில் நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் பலர் வந்துள்ளனர். நேற்று இரவு வீட்டில் போதிய இடம் இல்லாததால் சிலர் வாசலில் தூங்கி உள்ளனர். இன்று ( மே12) அதிகாலை 4 மணியளவில் மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட கார் ஒன்று, வாசலில் தூங்கியவர்கள் மீது ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அந்த தெரு முட்டுச்சந்து, காயமடைந்தவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு திரண்ட மக்கள் காரை ஓட்டி வந்த பெண்ணை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைஷாலி என்பதும் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us