/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அங்கன்வாடிகளில் பணியிடம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
/
அங்கன்வாடிகளில் பணியிடம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 06, 2025 07:51 PM
சென்னை:சென்னையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ், குழந்தை மையங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 102 உதவியாளர் பணியிடங்கள், நேரடி நியமனம் வாயிலாக நியமனம் செய்யப்பட உள்ளது.
இப்பணிக்கு தமிழ் தவறின்றி எழுத, படிக்க தெரிந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொது பிரிவினர் 25 - 35; ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினர் 25 - 40; மாற்றுத்திறனாளிகள் 20 - 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இப்பணிக்கான விண்ணப்பம், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ரேஷன், வாக்காளர், ஆதார் அட்டைகளின் நகல் இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், வரும் 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும் என, சென்னை கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

