/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் டி - 20 கிரிக்கெட் குருநானக் 'ஏ' அணி வெற்றி
/
மகளிர் டி - 20 கிரிக்கெட் குருநானக் 'ஏ' அணி வெற்றி
மகளிர் டி - 20 கிரிக்கெட் குருநானக் 'ஏ' அணி வெற்றி
மகளிர் டி - 20 கிரிக்கெட் குருநானக் 'ஏ' அணி வெற்றி
ADDED : அக் 04, 2025 01:50 AM
சென்னை :
'டி - 20' கிரிக்கெட் போட்டியில், குருநானக் 'ஏ' அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், எஸ்.எஸ்.என்., ஜெயின் கல்லுாரியை வீழ்த்தியது.
குருநானக் கல்லுாரியின் நான்காவது சீசன் பி.என்.தவான் நினைவு கோப்பைக்கான 'டி - 20' பெண்கள் கிரிக்கெட் போட்டிகள், வேளச்சேரியில் நடக்கின்றன.
நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில், டபிள்யூ.சி.சி., அணி, முதலில் பேட்டிங் செய்து, குறைக்கப்பட்ட 17 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 178 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த எஸ்.எஸ்.என்., ஜெயின் அணி, 17 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து, 68 ரன்களை அடித்தது. இதனால், 110 ரன்கள் வித்தியாசத்தில், டபிள்யூ.சி.சி., அணி வெற்றி பெற்றது.
நேற்று காலை நடந்த லீக் போட்டியில், எஸ்.எஸ்.என்., ஜெயின் கல்லுாரி மற்றும் குருநானக் 'ஏ' அணிகள் மோதின. டாஸ் வென்ற குருநானக் கல்லுாரி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த எஸ்.எஸ்.என்., அணி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 49 ரன்களை அடித்தது.
அடுத்து விளையாடிய குருநானக் 'ஏ' அணி, விக்கெட் இழப்பின்றி, 50 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இன்று இறுதிப் போட்டி நடக்கிறது.