sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவம் தரைப்பாலம் உயர்த்தி கட்ட ரூ.5 கோடியில் பணிகள் துவக்கம்

/

கூவம் தரைப்பாலம் உயர்த்தி கட்ட ரூ.5 கோடியில் பணிகள் துவக்கம்

கூவம் தரைப்பாலம் உயர்த்தி கட்ட ரூ.5 கோடியில் பணிகள் துவக்கம்

கூவம் தரைப்பாலம் உயர்த்தி கட்ட ரூ.5 கோடியில் பணிகள் துவக்கம்


ADDED : மே 07, 2025 11:56 PM

Google News

ADDED : மே 07, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலம், 106, 107வது வார்டுகளான அரும்பாக்கம் அருகில், சூளைமேடு பாரி தெரு வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.

நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய், அரும்பாக்கம், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, 6 கி.மீ., துாரத்தில், அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.

இக்கால்வாயை முறையாக சீரமைக்கப்படாததால், கால்வாய் முழுதும், குப்பை கழிவு நிறைந்து கிடக்கிறது.

குறிப்பாக, 106வது வார்டு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி அருகில், சூளைமேடு, பத்மநாப நகர், தமிழர் வீதியில் செல்லும் கால்வாயில் முட்செடிகள் வளர்ந்து, புதர் மண்டி போல் காட்சியளிக்கிறது.

இதனால் மழைக்காலத்தில், கால்வாயில் ஓடும் தண்ணீர் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துவிடும்.

அதனால், தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என, பலதரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தனர்.

இதையடுத்து, தமிழர் வீதி கூவம் தரைப்பாலத்தை சீரமைக்க, மாநகராட்சி மேம்பால துறை 4.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணியை துவக்கியது. பாலத்தின் இருபுறமும் இடித்து, 3 அடி உயரம் உயர்த்தி கட்டப்பட உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக, சுவர் மற்றும் பாலத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. பாலம் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவையும் அகற்றப்படும்' என்றனர்.

3 கி.மீ., சுற்றிச்செல்லும் அவலம்

சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி சிவன் கோவில் தெருவில் இருந்து அரும்பாக்கம் செல்வோர், தமிழர் வீதியை கடந்து தான், எம்.எம்.டி.ஏ., காலனி செல்ல முடியும். தற்போது, தமிழர் வீதியில் பாலம் கட்டும் பணியால் பிரதான சாலை மூடப்பட்டது. இதனால், 3 கி.மீ., சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us