sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து பணி புறக்கணிப்பு

/

 வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து பணி புறக்கணிப்பு

 வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து பணி புறக்கணிப்பு

 வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து பணி புறக்கணிப்பு


ADDED : டிச 23, 2025 05:12 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளரை கண்டித்து 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில் தலைமை அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதன் பொது மேலாளர் ராதாகிருஷ்ணனின் செயல்பாட்டை கண்டித்து, இம்மாதம் 18ம் தேதி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, 'பணியின்போது பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசுகிறார். விடுமுறை நாட்களில் ஊழியர்களை வரவழைத்து வேலை வாங்குகிறார். வார நாட்களில் இரவு 11:00 மணி வரை வேலை வாங்குகிறார்' என, குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், பெண்களிடம் அவதுாறாக பேசி வரும் பொது மேலாளர் ராதாகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தலைமை அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று, பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலாண் இயக்குநர் அண்ணாதுரை வந்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப, கோரிக்கை முன்வைத்தார். அதை ஏற்காத ஊழியர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us