ADDED : ஜன 24, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தொகுப்பூதிய அடிப்படையில், பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு, 40 வயதுக்கு உட்பட்ட சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, சட்டம் உள்ளிட்ட ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு, 27,804 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள், https://chennai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, 15 நாட்களுக்குள், விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

