sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம்

/

திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம்

திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம்

திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம்


ADDED : ஜூன் 17, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர் - மாணிக்கம் நகர் பிரதான சாலையில், பேருந்து நிலையம் மற்றும் பணிமனை செயல்பட்டு வந்தது. இங்கிருந்து, வள்ளலார் நகர், பிராட்வே, எழும்பூர், பூந்தமல்லி, கோயம்பேடு என, பல்வேறு வழித்தடங்களில், தினமும், 88 பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.

சில ஆண்டுகளுக்கு முன், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக பேருந்து நிலையத்தின் பாதி இடம் கையகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள, காலி மைதானத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. அங்கு போதிய இடம், குடிநீர் , கழிப்பறை கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால், பயணியர் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பேருந்து நிலையம் இடம், பணிமனை இடத்தையும் சேர்த்து, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் - பணிமனை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதைத்தொடர்ந்து, 14 கோடி ரூபாய் செலவில், 1.75 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமாக புதிய பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

முதற்கட்டமாக, பணிமனையிலிருந்த பேருந்துகள், ஆங்காங்கே இருக்கும் மற்ற பணிமனைகளை மாற்றி, பழைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிகள் முடிந்ததும், புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என, தெரிகிறது.

வெளியூர் பேருந்துகள்

புதிய பேருந்து நிலையம் கட்டி பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், வெளியூருக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கும் வசதிகள் இடம் பெற வேண்டும். வெளியூர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வடசென்னை வாசிகள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, இங்கிருந்து, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கடலுார், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் அதிகளவில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும்.- எம்.கேசவன், 45, திருவொற்றியூர்.








      Dinamalar
      Follow us