ADDED : நவ 18, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி: தி ருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கணேஷ், 43, மணலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்தார்.
நேற்று அதிகாலை, பொன்னேரி நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, அடையாளம் தெரியாத லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். செங்குன்றம் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, வழக் கு பதிவு செய்து, லாரியுடன் தப்பிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

