sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 காரில் கடத்தப்பட்ட இளம்பெண் விக்கிரவாண்டியில் மீட்பு காதலை முறித்ததால் வாலிபர் ஆத்திரம்

/

 காரில் கடத்தப்பட்ட இளம்பெண் விக்கிரவாண்டியில் மீட்பு காதலை முறித்ததால் வாலிபர் ஆத்திரம்

 காரில் கடத்தப்பட்ட இளம்பெண் விக்கிரவாண்டியில் மீட்பு காதலை முறித்ததால் வாலிபர் ஆத்திரம்

 காரில் கடத்தப்பட்ட இளம்பெண் விக்கிரவாண்டியில் மீட்பு காதலை முறித்ததால் வாலிபர் ஆத்திரம்


ADDED : டிச 06, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொளம்பூர்: சென்னையில் இருந்து காரில் கடத்தப்பட்ட இளம்பெண்ணை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வைத்து போலீசார் மீட்டு, அவரை கடத்திய வாலிபரை கைது செய்தனர்.

திருமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், 48 வயது நபர் ஒருவர், கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் , தன் மகள் கடத்தப்பட்டு விட்டதாகவும், தன் வீட்டின் அருகே வசித்து வந்த ஷியாம் சுந்தர் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், நொளம்பூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதன்படி, நொளம்பூர் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், இளம்பெண் கடத்தப்பட்ட காரின் எண்ணை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த னர். அதன்படி, வடக்கு மண்டலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திண்டி வனம் அருகே விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இளம்பெண்ணை கடத்திய காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த ஷியாம் சுந்தரை போலீசார் கைது செய்து, இளம்பெண்ணை மீட்டு சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், ஷியாம் சுந்தரும், இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில், சில மாதங்களு க்கு முன் இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன்பின், ஷியாம் சுந்தருடன் இளம்பெண் பேச மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் அப்பெண்ணை கடத்தியதும் தெரிந்தது. நொளம்பூர் போலீசார், ஷியாம் சுந்தரை கைது செய்து நேற்று மாலை சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு காரை கொடுத்து உதவி புரிந்த நபர் மற்றும் பெண் என இருவரை, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us