/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிணற்றில் குளித்த வாலிபர் உயிரிழப்பு
/
கிணற்றில் குளித்த வாலிபர் உயிரிழப்பு
ADDED : டிச 21, 2024 12:14 AM
திருப்போரூர்,
பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 36. இவரது நண்பர்கள் ஸ்டாலின், 35, சங்கர், 35, துரைராஜ், 35; ஆட்டோ ஓட்டுனர்கள்.
மேற்கண்ட அனைவரும், மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்குச் சென்று, நேற்று வீடு திரும்பினர். வரும் வழியில், செங்கல்பட்டில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைவரும் மாலையைக் கழற்றி உள்ளனர்.
பின், செங்கல்பட்டில் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கரும்பாக்கம் அருகே விவசாய கிணறு ஒன்றின் அருகே அமர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு, அதே கிணற்றில் குளித்து உள்ளனர்.
அப்போது, செந்தில்குமார் கிணற்றின் கரைப் பகுதியிலிருந்து குதித்த போது, உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை.
நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருப்போரூர் போலீசார், செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் செந்தில்குமாரின் உடலை மீட்டனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.