/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிமென்ட் கலவை லாரி மோதி வாலிபர் பலி
/
சிமென்ட் கலவை லாரி மோதி வாலிபர் பலி
ADDED : அக் 13, 2025 05:09 AM
கோயம்பேடு:பைக் மீது சிமென்ட் கலவை லாரி மோதியதில், கோயம்பேடு வாலிபர் உயிரிழந்தார்.
கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 30; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று அதிகாலை பணி முடிந்து யமஹா எப்.இசட்., பைக்கில் வீடு திரும்பினார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மேட்டுக்குளம் அருகே சென்றபோது, பின்னால் வந்த சிமென்ட் கலவை லாரி பைக் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த பாலாஜி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை, போலீசார் தேடி வருகின்றனர்.