ADDED : மார் 18, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் - மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை மீது அமைக்கப்பட்டு தண்டவாளத்தை, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை கடக்க முயன்றார்.
அப்போது, விரைவு ரயிலில் அடிபட்டு முகம் சிதைந்து பலியானார்.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.