ADDED : ஜன 28, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடபழனி: வடபழனி தரன்சிங் காலனியை சேர்ந்தவர் ஆமோஷ், 28. இவர், வீட்டிலேயே மொபைல் போன் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, குளிப்பதற்காக சுடு தண்ணீர் போட, வாளியில் தண்ணீர் நிரப்பி, ஹீட்டரை போட்டு ஆன் செய்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவ பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
வடபழனி போலீசார், அவரது உடலை மீட்டு, கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

