/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி மோதி காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
/
லாரி மோதி காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
ADDED : அக் 05, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன், 22, கோயம்பேடு பூ சந்தையில் பணிபுரிந்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன், கோயம்பேடு சந்தையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, குப்பை அகற்ற வந்த, அங்காடி நிர்வாக குழு ஒப்பந்த லாரி, அவர் மீது மோதியது.
தலையில் பலத்த காயம் அடைந்த கவியரசன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இறந்தார்.